For Daily Alerts
Just In
இனி தண்டவாளங்களில் குப்பை போட்டால் 5 ஆயிரம் “ஃபைன்” – பசுமை தீர்ப்பாயம் பரிந்துரை
டெல்லி: டெல்லியில் ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், ரயில் தண்டவாளத்தில் குப்பைகளை போட்டால் ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என்றும், ரயில்வேக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பரிந்துரை செய்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே மற்றும் டெல்லி மாநகராட்சி அதிகாரிகளுக்கு பசுமை தீர்ப்பாய நீதிபதி ஸ்வதந்தர் குமார் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, "தண்டவாளங்களுக்கு அருகே குப்பைகள் சேரும் இடங்களை கண்டறிந்து அங்கு குப்பைத் தொட்டிகளை அமைக்க வேண்டும்.
தண்டவாளங்களுக்கு அருகே மனித கழிவுகள் சேருவதை தடுக்கும் வகையில், ஆங்காங்கே மொபைல் கழிவறைகளை அமைக்க வேண்டும்.
ரயில்வே பிளாட்பார்ம் மற்றும் தண்டவாளங்களை அசுத்தப்படுத்துவோருக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Comments
English summary
The National Green Tribunal has hit out at the Delhi government for failing to take steps to implement the measures the tribunal had set out to improve the capital's poor air quality.
Story first published: Thursday, March 19, 2015, 12:16 [IST]