உரிய விதிகளை பின்பற்றாமல் துப்பாக்கிச் சூடு ஏன்- தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
உரிய விதிகளை பின்பற்றாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ஏன் என்று தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Recommended Video

டெல்லி: உரிய விதிகளை பின்பற்றாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ஏன் என்று தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது ஏராளமானோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர்.

அப்போதும் கலையாமல் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் 12 பேர் பலியாகிவிட்டனர். அவர்களது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் தர மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2 வாரங்களுள் தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உரிய விதிகளை பின்பற்றாமல் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்தும் விளக்கம் கோரியுள்ளது.












Click it and Unblock the Notifications