மேகாலயா சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணியில் முன்னேற்றம்.. அடிப்பகுதிக்கு சென்ற மீட்புக்குழு
கவுகாத்தி: மேகாலயா மலைப் பகுதியில் 15 தொழிலாளர்கள் சிக்கியிருக்கும் 370 அடி ஆழமுள்ள சுரங்கத்தின் அடிப்பகுதிக்கு மீட்புக்குழுவை சேர்ந்த நபர் முதல் முறையாக சென்று சேர்ந்திருக்கிறார்.
மேகாலயா மாநிலம் கிழக்கு ஜெயின்டியா உள்ள மலைப்பகுதியில் 370 அடி ஆழமுள்ள சுரங்கத்துக்குள் 15 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். கடந்த 19 நாட்களாக அவர்கள் அந்த சுரங்கத்துக்குள் சிக்கி தவித்து வருகின்றனர்.

மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப் படை உட்பட பல்வேறு படை வீரர்களைக் கொண்ட மீட்புக் குழு நடத்திய பல்வேறு முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. இருப்பினும் அவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன.
ஒடிசாவில் இருந்து மீட்புப் பணிக்காக விரைந்த சிறப்பு தீயணைப்புப் படையினர் மிக அதிக அழுத்தம் கொண்ட பம்புகளைக் கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சுரங்க வாயிலை மூடியுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
சுரங்கத்துக்குள் ஆழ்கடல் நீச்சலில் நன்கு தேர்ச்சி பெற்ற வீரர்கள் இறங்கி தேடி வருகின்றனர்.கிட்டத்தட்ட 19 நாட்களுக்கு மீட்பு பணிகளில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மீட்பு குழுவைச் சேர்ந்த ஒருவர் 370 அடி ஆழம் கொண்ட சுரங்கத்தின் அடிபாகத்துக்கு சென்றுள்ளார்.
சுரங்கத்தினுள் தேடுதல் வேட்டையை நடத்திய போது யாரும் உள்ளே இல்லை என்று மீட்புக்குழுவினருக்கு அவர் தகவல் கூறியுள்ளார். சுரங்கத்தின் முகப்பில் நிலக்கரி துகள்களும், சேறும் நிறைந்து காணப்பட்டதாக அவர் தெரிவித்து உள்ளார்.
சுரங்கத்தினுள் உள்ள சேறை முற்றிலும் அகற்றிய பின்னரே என்ன மாதிரியான நிலைமை என்பது முழுமையாக தெரிய வரும் என்று மீட்புக்குழுவினர் கூறியுள்ளளனர். தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் 19 நாட்களாக சுரங்கத்துக்குள் தவித்து வரும் தொழிலாளர்கள் உயிருடன் இருப்பார்களா என்பது சந்தேகமே என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications