சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுத்த நேருவின் தங்கை மகள் நயன்தாரா ஷாகல்
டெல்லி: முன்னாள் பிரதமர் நேருவின் தங்கை மகள் நயன்தாரா ஷாகல் தனது சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தங்கையின் மகள் நயன்தாரா ஷாகல். அவர் எழுதிய ரிச் லைக் அஸ்(1985) என்ற ஆங்கில நாவலுக்காக அவருக்கு கடந்த 1986ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் 88 வயதாகும் அவர் தனது சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆட்சியாளர்கள் பாசிச கொள்கையை கடைபிடிக்கிறார்கள். அது எனக்கு கவலையை அளித்துள்ளது. இதுவரை நம் நாட்டில் பாசிச அரசு இருந்தது இல்லை. மூடநம்பிக்கைகள் பற்றி கேள்வி எழுப்புபவர்கள், இந்துத்துவா பற்றி கேள்வி கேட்பவர்கள், உணவு பழக்கவழக்கம் அல்லது வாழ்க்கைமுறை பற்றி கேள்வி கேட்பவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள் அல்லது கொலை செய்யப்படுகிறார்கள்.
அண்மையில் முகமது அக்லாக் என்பவர் அவரது வீட்டில் மாட்டிறைச்சி சமைத்ததாக சந்தேகித்து பிசாதா கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து இழுத்து வரப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயங்களில் எல்லாம் நீதி இழுத்துக் கொண்டிருக்கிறது. தீவிரவாதத்தின் ஆதிக்கம் பற்றி பிரதமர் அமைதியாக உள்ளார். அவரது கொள்கைகளை ஆதரிக்கும் தீயவர்களை அவர் தனிமைப்படுத்த மாட்டார் என்று நாம் யூகித்துக் கொள்ள வேண்டியது தான். சாகித்ய அகாடமி அமைதியாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.
கொலை செய்யப்பட்ட இந்தியர்களின் நினைவாகவும், எதிர்ப்பை தெரிவிக்கும் உரிமையை பாதுகாக்கும் இந்தியர்களை ஆதரிக்கவும், தங்களின் எதிர்ப்பை தெரிவித்துவிட்டு பயத்தில் வாழும் அனைவருக்காகவும் நான் சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுக்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நன்கு பேசத் தெரிந்த அரசியல்வாதி மோடி. அவர் நீண்ட உரையாற்றுவார். ட்விட்டர் மற்றும் பிற சமூகவலைதளங்களில் பேசுவார். நாட்டில் நடந்து வருபவைக்கு அவர் தான் பொறுப்பு. மோடியின் ஆட்சியில் இந்தியா பின் நோக்கி செல்கிறது. கலாச்சார பன்முகத்தை நிராகரித்துவிட்டு இந்துத்துவாவை நோக்கி செல்கிறது என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications