2 இந்திய மீனவர்கள் கொலை: இத்தாலி கடற்படை வீரர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க பரிந்துரை
டெல்லி: கேரள கடற்பரப்பில் 2 இந்திய மீனவர்களை படுகொலை செய்த இத்தா கடற்படை வீரர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க தேசிய புலனாய்வு அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
கேரள கடற்பகுதியில் நின்று கொண்டிருந்த இத்தாலி நாட்டு சரக்கு கப்பலில் இருந்த 2 இத்தாலி கடற்படை வீரர்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 2 மீனவர்களை கடற் கொள்ளையர்கள் என்று கருதி சுட்டுக் கொன்றனர்.
இந்த கொலை வழக்கில் குற்றம் சட்டப்பட்டவர்கள் நீதிமன்ற அனுமதியுடன் இத்தாலி சென்றனர். பின்னர் இந்தியா திரும்ப மாட்டார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்தது.
இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டிப்பை அடுத்து அவர்கள் இந்தியா கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படாது என்று உறுதி அளித்து, பின்னர் வெளியுறுவுத் துறை அமைச்சகம் அவர்களை இந்தியா கொண்டு வந்தது.
2 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தேசிய புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. சம்பவத்தை நேரில் பார்த்த இத்தாலி சாட்சிகள் 4 பேரை இந்தியாவுக்கு அனுப்ப இத்தாலி மறுத்து விட்டது.
பின்னர் இத்தாலி சாட்சிகள் 4 பேர் ரோம் நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் டெல்லியில் இருந்து கொண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ் வழியாக விசாரணை நடத்தினார்கள்.
தற்போது வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு குழு அவர்களுக்கு தூக்கு தண்டனையை வழங்க பரிந்துரைத்துள்ளது. விசாரணை நடத்திய புலனாய்வு பிரிவு இத்தாலி கடற்படை வீரர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications