ராஜ்யசபாவில் புயலை கிளப்பிய நிர்பயா ஆவணப்படம்: அமளி, ஒத்திவைப்பு- ராஜ்நாத்சிங் விளக்கம்
டெல்லி: எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் அமளியால் மாநிலங்களவையில் இன்று அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. இதனால், 15 நிமிடங்கள் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் பெண் ஒருவர் கூட்டாக வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த லெஸ்லி உட்வின் என்பவர் நிர்பயா சம்பவத்தை, "இந்தியாவின் மகள்" என்ற தலைப்பில் ஆவணப் படமாக தயாரித்துள்ளார்.

இந்த ஆவணப்படத்தில், நிர்பயா வழக்கில் தண்டனை பெற்றுள்ள குற்றவாளி முகேஷ் சிங், பேசியிருக்கும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
சிறையில் இருக்கும் முகேஷ்சிங், "அந்தப் பெண்ணை நான் பலாத்காரம் செய்யவில்லை. பலாத்காரம் நடந்த போது நான் பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். பலாத்கார சம்பவங்களுக்கு ஆண்களை விட பெண்களே அதிகம் பொறுப்பேற்க வேண்டும். இரவு நேரங்களில் பெண்கள் வெளியே சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது.
பலாத்காரத்தின்போது அந்த பெண் எதிர்த்து போராடியிருக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. அவர் போராடியிருக்கக் கூடாது. 20 சதவீத பெண்கள் மட்டுமே நல்லவர்களாக உள்ளனர்" என்று கூறியுள்ளார்.
மிகக் கொடூரமான பலாத்கார சம்பவம் பற்றி குற்றவாளி தெரிவித்துள்ள இந்த கருத்துகள் பல்வேறு சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.
திகார் சிறையில் இருக்கும் குற்றவாளி, தனியார் தொலைக்காட்சியில் பேசியிருப்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ராஜ்யசபாவில், ஜெயா பச்சன் உள்ளிட்ட பெண் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதுடன், சபாநாயகர் இருக்கையையும் முற்றுகையிட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து அவையை 15 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் உத்தரவிட்டார். இதனையடுத்து 15 நிமிடங்கள் அவை ஒத்திவைக்கப்பட்டது.
நிர்பயா பலாத்கார வழக்கில் கைதான குற்றவாளி முகேஷ் சிங் பேட்டியுடன் ஆவணப் படம் வரும் 8 ஆம் தேதி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு
திகார் சிறையில் இருக்கும் குற்றவாளி, தனியார் தொலைக்காட்சியில் பேசியிருப்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் துவங்கியபோது, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்தார். அப்போது, 'நிர்பயா வழக்கு குற்றவாளியிடம் பேட்டி எடுத்த விவகாரத்தில் விதிமீறல்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை முடிந்ததும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications