பீகார் சட்டசபை தேர்தல்: லாலுவுடன் தொடரும் 'பஞ்சாயத்து'- நிதிஷ் தனித்து போட்டி?
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தனித்துப் போட்டியிடும் எனக் கூறப்படுகிறது.
பீகாரில் வருகிற அக்டோபர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் லோக்சபா தேர்தலில் கூட்டணி முறிந்ததால் இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டது. இதில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது.

நிதிஷ்- லாலு ஜோடி
இதனைத் தொடர்ந்து நிதிஷ்குமார் லல்லுபிரசாத் யாதவுடன் கை கோர்த்தார். இடைத் தேர்தல்களில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளமும், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளமும் ஒன்றாக இணைந்து போட்டியிட்டன.

ஜனதா பரிவார்
அத்துடன் ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைத்து தேசிய அளவில் ஜனதா பரிவார் என்ற அமைப்பை உருவாக்கவும் முயற்சி நடந்தது. ஆனால் இதில் சிக்கல் உருவானதால் இணைப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் மாநில அளவில் ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டிரிய ஜனதா தளமும் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது.

சிக்கல் உருவானது
இதில் முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிக்க வேண்டும் என்று நிதிஷ்குமாரும், முதல்வரை தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்பு தேர்ந்தெடுக்கலாம் என்று லல்லுபிரசாத் யாதவும் கூறியதால் கூட்டணி உருவாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வர் மாஞ்சியை ஜனதா பரிவாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் லாலு வலியுறுத்துகிறார்.

ஐக்கிய ஜனதா தளம் தனித்து போட்டி?
இது போன்ற முட்டுக் கட்டைகளால் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனித்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பாட்னாவில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நிதிஷ்குமார், பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி ஏற்பட்டால் நன்றாக இருக்கும். கூட்டணி ஏற்படா விட்டால் தனித்து போட்டியிட தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தனித்து போட்டியிடும் என்றே கூறப்படுகிறது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications