பீகார் சட்டசபை தேர்தல்: லாலுவுடன் தொடரும் 'பஞ்சாயத்து'- நிதிஷ் தனித்து போட்டி?
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தனித்துப் போட்டியிடும் எனக் கூறப்படுகிறது.
பீகாரில் வருகிற அக்டோபர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் லோக்சபா தேர்தலில் கூட்டணி முறிந்ததால் இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டது. இதில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது.

நிதிஷ்- லாலு ஜோடி
இதனைத் தொடர்ந்து நிதிஷ்குமார் லல்லுபிரசாத் யாதவுடன் கை கோர்த்தார். இடைத் தேர்தல்களில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளமும், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளமும் ஒன்றாக இணைந்து போட்டியிட்டன.

ஜனதா பரிவார்
அத்துடன் ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைத்து தேசிய அளவில் ஜனதா பரிவார் என்ற அமைப்பை உருவாக்கவும் முயற்சி நடந்தது. ஆனால் இதில் சிக்கல் உருவானதால் இணைப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் மாநில அளவில் ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டிரிய ஜனதா தளமும் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது.

சிக்கல் உருவானது
இதில் முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிக்க வேண்டும் என்று நிதிஷ்குமாரும், முதல்வரை தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்பு தேர்ந்தெடுக்கலாம் என்று லல்லுபிரசாத் யாதவும் கூறியதால் கூட்டணி உருவாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வர் மாஞ்சியை ஜனதா பரிவாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் லாலு வலியுறுத்துகிறார்.

ஐக்கிய ஜனதா தளம் தனித்து போட்டி?
இது போன்ற முட்டுக் கட்டைகளால் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனித்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பாட்னாவில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நிதிஷ்குமார், பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி ஏற்பட்டால் நன்றாக இருக்கும். கூட்டணி ஏற்படா விட்டால் தனித்து போட்டியிட தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தனித்து போட்டியிடும் என்றே கூறப்படுகிறது.
-
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications