2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் 2021 முதல் அஸ்ஸாமில் அரசு பணி இல்லை!
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் 2021 முதல் அரசு பணி இல்லை என அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அஸ்ஸாம் அரசு 2017-ம் ஆண்டு அம்மாநில சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு பணி இல்லை என்பது அத்தீர்மானம்.

அஸ்ஸாம் அமைச்சரவை கூட்டம்
தற்போது இந்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அஸ்ஸாம் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவுகள்
இந்த கூட்டத்தில் புதிய நில சீர்திருத்தக் கொள்கை மற்றும் 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு பணி இல்லை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதனடிப்படையில் நிலமற்ற பழங்குடி மக்களுக்கு வேளாண்மை செய்யவும் வீடு கட்டவும் நிலம் ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் தந்தது.

இலவச நிலத்துக்கு கட்டுப்பாடு
மேலும் அரசு வழங்கும் இலவச நிலத்தை 15 ஆண்டுகாலத்துக்கு மற்றவர்களுக்கு விற்பனை செய்ய முடியாது எனவும் அரசு அறிவித்துள்ளது. இச்சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால்..
அத்துடன் 2021 ஜனவரி 1-ந் தேதி முதல் 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு பணி இல்லை என்பதற்கான ஒப்புதலையும் அமைச்சரவை கொடுத்துள்ளது. தற்போதைய அரசு ஊழியர்களும் இதனை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என அஸ்ஸாம் அமைச்சரவை வலியுறுத்தியுள்ளது. அண்மையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டு விவகாரம் அஸ்ஸாமில் பெரும் சர்ச்சையானது.

பல லட்சம் பேர் அவதி
தேசிய குடிமக்கள் பதிவேட்டு நடவடிக்கை மூலம் பல லட்சம் பேர் நாடற்றவர்களாக்கப்பட்டுவிட்டனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதேநேரத்தில் மத்திய அரசோ, தேசியகுடிமக்கள் பதிவேடு நடைமுறை என்பது உச்சநீதிமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டது.

வடகிழக்கில் டென்சன்
குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாத எவரும் நாடு கடத்தப்படமாட்டார்கள். இதை அரசியலாக்க வேண்டாம் என தெரிவித்திருந்தது. இருப்பினும் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் அஸ்ஸாம் உட்பட நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒருவித அசாதாரண சூழ்நிலைக்கு காரணமாக இருந்தது.

பெண்கள் கல்வி
இந்நிலையில் 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு பணி இனி இல்லை என்பது அம்மாநிலத்தில் புதிய விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது. 2017-ம் ஆண்டு அஸ்ஸாம் சட்டசபை தீர்மானத்தின்படி பெண்களுக்கு பல்கலைக் கழக படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications