சுயசார்பு பாரதம் உருவாவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: பிரதமர் மோடி
கொல்கத்தா: 130 கோடி இந்தியர்கள் இணைந்து உருவாக்கும் சுயசார்பு பாரதத்தை உலகின் எந்த ஒரு சக்தியாலும் தடுத்துவிட முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு நாணயம், அஞ்சல் தலையை வெளியிட்டு பிரதமர் மோடி பேசியதாவது;
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினம் இனி ஆண்டுதோறும் பராக்கிரம தினமாக கொண்டாப்படும். உலகம் பெண்களின் உரிமைகள் குறித்து பேசிக் கொண்டிருந்த காலத்தில் பெண்களைக் கொண்ட ஜான்சி ராணி ரெஜிமென்ட்டையே உருவாக்கியவர் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ்.

இந்திய விடுதலைப் போரில் புதிய பார்வையை கொடுத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 2-வது உலக யுத்தத்தின் போது ஒவ்வொரு நாடுகளின் உதவியையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கேட்டது தேசத்தின் விடுதலைக்காக. இன்று ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் விஸ்வரூபத்தை பார்த்து கொண்டிருக்கிறது.
இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படுகிற சவால்களுக்கு நாம் தக்க பதிலடியை கொடுத்து கொண்டிருக்கிறோம். 130 கோடி இந்தியர்கள் இணைந்து உருவாக்கும் சுயசார்பு பாரதத்தை உலகின் எந்த ஒரு சக்தியாலும் தடுத்துவிட முடியாது.
நேதாஜியின் வாழ்க்கை, செயல்பாடுகள், முடிவுகள் அனைத்தும் நமக்கு முன்னுதாரணமானவை. கொரோனா காலத்தில் நாம் பிறநாடுகளுக்கு உதவுவதை பார்த்து நேதாஜி இருந்திருந்தால் பெருமிதம் அடைந்திருப்பார். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications