வங்கி லாக்கர்களை பறிமுதல் செய்ய திட்டமா? நிதி அமைச்சகம் விளக்கம்
வங்கி லாக்கர்களை பறிமுதல் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி: வங்கி லாக்கர்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தங்க, வைர நகைகளை பறிமுதல் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை எனவும், அவ்வாறு வெளியாகியுள்ள செய்திகள் வெறும் வதந்தி என்றும் நிதி அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி நள்ளிரவு முதல் 500. 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த அதிவலையில் இருந்து மக்கள் மீண்டு இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை. அதற்குள்ளாக கருப்புப் பண ஒழிப்பில் அடுத்த கட்டமாக பேங்க் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும் நகைகள் 600 கிராமுக்கு மேல் இருந்தால், அதற்கு முறையான ஆவணங்கள் காண்பிக்கப்பட வேண்டும்.

வங்கி லாக்கர்களில் குறிப்பிட்ட கிராம்களுக்கு மேல் நகை வைத்திருப்பவர்கள், அதற்கு சரியான ஆவணங்களை காட்ட வேண்டும் என மத்திய அரசு விரைவில் அறிவிக்ககப்போவதாக செய்திகள் உலா வந்தன. அதேபோல் விரைவில் 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுக்களையும் செல்லாது என மோடி அறிவிக்க உள்ளார் எனவும் வதந்திகள் பரவின.
மேலும், ரூ.2000 நோட்டு மோசமான தரத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது, சாயம் போகிறது, பாதுகாப்பு இல்லாதது, என்றெல்லாம் வகை, வகையாக வதந்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அதில் உண்மை இல்லை எனவும், அது வெறும் வதந்திதான் எனவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வைத்திருக்கும் லாக்கர்களை பறிமுதல் செய்யப்போவதாக பரவி வரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. சிலர் சமூக ஊடகங்களில் திட்டமிட்டே இதுபோன்ற தகவல்களை பரப்பி வருகின்றனர்.
வங்கி லாக்கர்களில் உள்ள தங்க, வைர நகைகளை பறிமுதல் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை எனவும், 2000 ரூபாய் நோட்டு பாதுகாப்பு குறைபாடு உள்ளது என்ற குற்றச்சாட்டையும் மறுத்துள்ளது. 2000 ரூபாய் நோட்டை பொறுத்த வரையில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளவாறே அச்சிடப்பட்டுள்ளது என நிதி அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications