காங்கிரஸால் தான் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன்: கெஜ்ரிவால் தாக்கு
டெல்லி: முதல்வர் நாற்காலியை விட்டு வந்திருக்கக் கூடாது என்பதை புரிந்து கொண்டதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் 49
நாட்களில் அவரது அரசு போன்று வேறு யாருமே செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றார். ஆனால் மத்திய அரசு ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றவில்லை என்று கூறி கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில்,

எங்களை போன்று
இந்திய வரலாற்றிலேயே நாங்கள் 49 நாட்களில் செய்த வேலையை யாருமே செய்தது இல்லை. நாங்கள் மின்சாரம், நீரின் விலையை குறைத்தோம். மேலும் ஊழலை கட்டுப்படுத்தினோம்.

மோடி
100 நாட்களில் மோடி என்ன செய்துவிட்டார்?. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பாஜக அரசு தவறிவிட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் ரயில் கட்டணம், பெட்ரோல், சர்க்கரையின் விலையை உயர்த்திவிட்டனர்.

பாடம்
முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கக் கூடாது. அது குறித்து பாடம் கற்றுக் கொண்டேன். நாங்கள் அரசியலுக்கு புதுசு. பதவி நாற்காலியை விட்டு விலகக் கூடாது என்பதை புரிந்து கொண்டோம்.

காங்கிரஸ்
காங்கிரஸ் எங்களை பணியாற்ற விடவில்லை. நான் வெறும் 49 நாட்கள் தான் முதல்வராக இருந்தேன். காங்கிரஸால் தான் நான் விலகினேன்.

மிரட்டல்
மிரட்டல்களை கண்டு பயந்து ஓடுபவர்களில் ஒருவன் அல்ல நான். குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் தனக்காக ஒரு ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார். ஆனால் நான் பழைய வேகன் ஆர் காரில் தான் பயணம் செய்கிறேன்.

மானியம்
மின்சாரத்திற்கு ரூ.200 கோடி மானியம் அளித்ததற்காக என்னை குறை கூறினார்கள். நான் என்ன எனக்காகவா செய்தேன், மக்களுக்காக செய்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications