அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத்சிங்
ராஞ்சி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த ஒரு சக்தியாலும் தடுக்க முடியாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 30-ல் நடைபெறுகிறது. மொத்தம் 5 கட்டங்களாக இம்மாநிலத்தில் தேர்தல் நடைபெறுகிறது.

தற்போது தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. இத்தேர்தல் பிரசாரத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது:
அயோத்தியில் நிச்சயம் ராமர் கோவில் நிச்சயம் கட்டுவோம். இதனைத் தடுக்க உலகில் எந்த ஒரு சக்தியாலும் முடியாது. 1952-ம் ஆண்டு ஜனசங்க தலைவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நாட்டில் 2 அரசியல் சாசனங்கள் இருக்க முடியாது என கூறியிருந்தார்.
அதேபோல் ஒரு தேசத்தில் 2 பிரதமர்கள், 2 கொடிகள் இருக்க முடியாது என்றும் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி கூறியிருந்தார். தற்போது அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை நீக்கியதன் மூலம் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் கனவை நிறைவேற்றியிருக்கிறோம்.
லோக்சபா தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி கொடுத்திருக்கிறோம். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications