யார் மீதும் யாரும் இந்தியை திணிக்கவில்லை- வெங்கையா நாயுடு சொல்கிறார்
டெல்லி: இந்தியை மத்திய அரசு திணிப்பதாக தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

இந்திக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மத்திய அரசு இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஒன்று, சமூக வலைதளங்களில் இந்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மற்றொன்று அலுவல்களை பெரும்பாலும் இந்தியிலேயே எழுதும் பணியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ2 ஆயிரம் ஊக்கத் தொகையும், 2வது மற்றும் 3வது பரிசாக ரூ1,200 மற்றும் ரூ600ம் வழங்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, யார் மீதும் இந்தி மொழியை யாரும் திணிக்கவில்லை. இப்படி ஒரு தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை நான் ஏற்கிறேன். அரசின் கொள்கையும் கூட அதுவேதான். இதில் எந்த மொழியையும் திணிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.












Click it and Unblock the Notifications