அமித்ஷா விசிட், 40,000 வீரர்கள் டேரா-மணிப்பூரில் வன்முறை நீடிக்குதே? சந்தேகம் எழுப்பும் நாகாலாந்து!
கோஹிமா: மணிப்பூரில் வன்முறைகளை கட்டுப்படுத்தாமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது ஏன் என நாகாலாந்து மாணவர் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வடகிழக்கு மாநிலங்களில் மாணவர் கூட்டமைப்பு சார்பாக மணிப்பூரில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க கோரி மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.
நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் நாகாலாந்து மாணவர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான Mutsikhoyo Yhobu பேசியதாவது: மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடியின் மவுனம், வடகிழக்கு மாநில மக்களை ஒட்டுமொத்த இந்தியாவின் மைய நீரோட்டத்தில் இருந்து விலகிச் செல்ல வைக்கிறது.
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு ஏதோ ஒரு மறைமுகமான செயல் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் மாநிலத்துக்கு வந்து சென்றார். அவரது கண்களாலேயே பற்றி எரியும் மணிப்பூரை பார்த்தார். 40000 ராணுவ வீரர்கள் மணிப்பூரில் குவிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் மணிப்பூரில் இன்னமும் வன்முறை ஓயவில்லை. மணிப்பூரில் சூறையாடல்கள் ஓயவில்லை. இவை அனைத்துமே மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.

மணிப்பூரின் மைத்தேயி- குக்கி இனக்குழுவினரிடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எப்போதுமே பிரசனைகளுக்கு வன்முறை தீர்வு கிடையாது. இவ்வாறு Mutsikhoyo Yhobu பேசினார்.
இதனிடையே மணிப்பூர் வன்முறை பாதித்த பகுதிகளை பார்வையிட மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலம் சென்றுள்ளார். மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார் ராகுல் காந்தி.

மேலும் திரிபுரா, அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி North East Students Organisation சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடத்தப்பட்டது
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications