பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி
ஜெய்ப்பூர்: தமது பாட்டி இந்திரா மற்றும் அப்பா ராஜிவைப் போல நானும் கொலை செய்யப்படலாம்.. அதற்காக அச்சப்படவில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உருக்கமாக பேசியுள்ளார்.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி 2வது கட்டமாக இன்று பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி பேசியதாவது:

நான் என் உள்ளத்தில் இருப்பதையே பேசி வருகிறேன். இதுவரை நான் சொல்லாத விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இதைப்பற்றியெல்லாம் பேசத்தேவையில்லை.. இருப்பினும் சொல்கிறேன்..
எங்களுக்காக என் அப்பா ராஜிவ் காந்தி போட்ட கட்டுப்பாடுகளை உடைத்து எங்களைக் காப்பாற்றியவர் பாட்டி இந்திராதான். என்னுடைய பாட்டியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கு முன்பாக அவர் மீது கையெறி குண்டுகளை வீச திட்டமிட்டிருந்ததாக பின்னாளில் அறிந்து கொண்டேன்.
அன்று நான் புவியியல் பாடம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருநபர் எனது வகுப்பறைக்கு வந்து ஆசிரியரிடம் ஏதோ சொன்னார்...உடனே ஆசிரியர் என்னை வீட்டுக்குப் போகச் சொன்னார்..என்ன நடக்கிறது என்பதை அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை. என்னுடைய வீட்டில் பணிபுரிந்த பெண்மணியிடம் அப்பா, அம்மா நலமா என்று கேட்டேன். ஆம் என்றார். ஆனால் பாட்டியைப் பற்றி கேட்ட போது இல்லை இல்லை வீட்டுக்கு வா என்று சொல்லிவிட்டனர்.
நாங்கள் வீட்டுக்குப் போனபோது தரையில் பாட்டியின் ரத்தம் சிதறிக் கிடந்திருந்ததது. இன்னொரு அறையில் என்னிடம் நண்பர்களாகப் பழகியவர்கள் ரத்தத்தில் மிதந்து போயிருந்தனர். என்னிடம் நண்பர்களாக பழகிய பியாந்த் சிங், சத்வத்சிங் மீது கடும் கோபம் எழுந்தது. இந்த கோபத்தை பல ஆண்டுகாலம் அடக்கியே வைத்திருந்தேன். இதேபோல் என்னுடைய தந்தையும் படுகொலை செய்யப்பட்டார்.
இப்படியான சம்பவங்களை இருமுறை நான் பார்த்துவிட்டேன். அவர்கள் என்னையும் கூட கொலை செய்யலாம். அதற்கெல்லாம் நான் அச்சப்படவில்லை. காங்கிரஸ் கட்சிதான் மக்களுக்கான உணவுக்கு உத்தரவாத மசோதாவை நிறைவேற்றியது. விவசாயிகளின் நிலத்தைப் பாதுகாக்கும் மசோதாவையும் நிறைவேற்றியது.
இந்தியாவில் ஏழைகள் வாழ்கிறார்கள் என்று சொல்லவே கூடாது என்பதற்காக உணவு உத்தரவாத மசோதாவை நிறைவேற்றினோம் என்றார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications