ஐசியூவில் அட்மிட்டான இளம்பெண் பலாத்காரம்.. மயக்கஊசி செலுத்தி மருத்துவமனை ஊழியர் செய்த கொடூரம்! ஷாக்
ஜெய்ப்பூர்: நுரையீரல் தொற்று சிகிச்சைக்காக ஐசியூவில் அட்மிட் செய்யப்பட்ட 24 வயது இளம்பெண்ணை அதிகாலையில் யாரும் இல்லாத போதும் மயக்க ஊசி செலுத்தி மருத்துவமனை ஊழியர் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார். இந்நிலையில் தான் இளம்பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவர் அருகே உள்ள டாக்டரிடம் சிகிச்சை பெற்றார். ஆனாலும் உடல்நலம் குணமாகவில்லை.

இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஐசியூவில் அட்மிட் செய்யப்பட்டார்.
நுரையீரல் தொற்று பிரச்சனையை சரிசெய்வதற்கான சிகிச்சைகள் அந்த இளம்பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வந்தது. அவர் படிப்படியாக குணமாகி வருகிறார். இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் அந்த இளம்பெண் அட்மிட் செய்யப்பட்டுள்ள ஐசியூ அறையில் யாரும் இல்லை. அந்த சமயத்தில் மருத்துவமனை ஊழியர் சிராக் யாதவ் பணியில் இருந்துள்ளார்.
அப்போது சிராக் யாதவ் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்தில் அந்த பெண்ணை தவறாக அணுகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட முயன்றுள்ளார். அப்போது பயந்துபோன சிராக் யாதவ் அவரது வாயை பொத்தி மயக்க ஊசி செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் மயங்கி உள்ளார்.
அதன்பிறகு சிராக் யாதவ் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மயக்கத்தில் இருந்து கண்விழித்த அந்த இளம்பெண் சம்பவம் குறித்து தனது கணவருக்கு போனில்அழுதபடி கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் முதற்கட்டமாக ஆய்வு செய்தனர். மேலும் மருத்துவமனை ஊழியர் சிராக் யாதவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications