ஐசியுவில் இனி ஆன்மீக பஜனை.. ஏன் தெரியுமா? ஒடிசா மருத்துவமனை சொன்ன காரணத்தை பாருங்க! அசந்துபோவீங்க
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் நோயாளிகள் விரைவில் குணமடைய உதவுவதற்காக ஐசியு பிரிவில் ஆன்மீக பஜனைகளை ஒலிக்கவிட மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சையில் இருப்போர் விரைவில் உடல் நலம் தேற வேண்டும் எனில் நல்ல இசையை ரசிக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது மனதை மேலும் வலிமையாக்கி உற்சாகமடைய செய்யும். இதன் மூலம் மருந்துகள் சிறப்பாக வேலை செய்து உடல் விரைவில் ஆரோக்கியம் பெறும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இப்படி இருக்கையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பஜனை பாடல்களை ஒலிக்கவிட மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள SCB மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்தான் பஜனை பாடல்கள் ஒலிபரப்பப்பட இருக்கிறது. இந்த மருத்துவமனையின் ஐசிபியு பிரிவில் பாடல்கள் ஒலிக்கப்படும். மருத்துவமனையின் அதிகாரிகள் அனைத்து ஐசியு பிரிவிலும் இந்த பாடலை ஒலிபரப்ப அனுமதியளித்துள்ளனர். இந்த ஆன்மீக பஜனைகள் நோயாளிகளின் எண்ணத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், இது நோயிலிருந்து அவர்களை விரைவில் குணமடைய வைக்க உதவும் என்று மருத்துவமனை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது குறித்து மருத்துவமனையின் துணை வேந்தர், டாக்டர் அபினாஷ் ரூத் கூறுகையில், "இனிமையான ஒலி குணமடைவதில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது தொடர்பான திட்டம் குறித்து ஆலோசித்த பிறகு மருத்துவமனையின் அனைத்து ஐசியுக்களிலும் பஜனையை ஒலிக்கவிட முடிவெடுத்துள்ளோம். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும். இதற்காக அரசு ஒப்புதலும் பெறப்படும். இப்பணியை மேற்கொள்வதற்கு தனியாரிடம் டென்டர் விடப்படும்" என்று அவர் கூறியுள்ளார். நோயாளிகள் விரைவில் குணமடைய இதுபோன்று இசையை பயன்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு காலகட்டத்தில் குஜராத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இதுபோன்று இசை ஒலிக்கப்பட்டது.
ஆனால் தற்போது ஒடிசா மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு சில எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. அதாவது, ஆன்மீக பஜனையை ஒலிக்கவிடுவது என்று முடிவெடுத்தால் எந்த மதத்தின் பஜனையை ஒலிக்கவிடுவது? என்கிற கேள்வி எழும். சிலர் பெரும்பான்மை மதத்தின் பஜனை பாடலை கேட்பார்கள். சிலர் சிறுபான்மை மதத்தின் பாடலை விரும்புவார்கள். இன்னும் சிலர் மதமற்றவர்களாக இருப்பார்கள். அப்படி இருக்கும்போது இது தேவையில்லாத பிரச்னைகளை ஏற்படுத்தும்.
ஒருவேளை மருத்துவமனை குறிப்பிட்ட மதம் தொடர்புடைய பாடல்களை ஒலிக்கவிட்டால் பிரச்னைகள்தான் எழும் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர். எது எப்படி இருந்தாலும் நோயாளிகள் விரைவில் குணமடைய தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications