உருளைகிழங்கு இல்லைன்னா யாரும் சாகமாட்டாங்க..: ஒடிஷா அமைச்சர் பேச்சால் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

Odisha: Health Minister Damodar Rout sorry over potato statement
புவனேஸ்வர்: உருளைகிழங்கு இல்லை எனில் யாரும் சாகப்போவது இல்லை என்று ஒடிஷா அமைச்சர் தாமோதர் ரெளத் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

வெங்காய விலை உயர்ந்ததை தொடர்ந்து உருளைக் கிழங்கு விலையும் எகிறியது. இதனால் இதர மாநிலங்களுக்கு உருளைக் கிழங்கை சப்ளை செய்ய மாட்டோம் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மமதா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தங்களது மாநிலத்துக்கான உருளை கிழங்கு விநியோகத்தை குறைக்கக் கூடாது என்றும் நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில்தான் ஒடிஷா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தாமோதர் ரெளத், உருளைகிழங்கு இல்லை என்பதால் யாரும் சாகப்போவது இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். இது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் அமைச்சர் தாமோதர் ரெளத் தமது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். தமது கருத்து யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தமடைவதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+