பழைய பகை... சிறுநீர் குடிக்க வைத்து... செருப்பு மாலை... விசாரணைக்கு உத்தரவு!!
பத்ரக்: ஒடிஸாவில் பழிக்குப் பழி வாங்கும் விதமாக மொட்டை அடித்து, சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய பத்ரக் மாவட்ட கலெக்டர் ஞானரஞ்சன் தாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஒடிஸாவில் பத்ரக் மாவட்டத்தில் பவுன்ஸ்பேக் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதுக்காரர். திஹிடி போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவரின் மனைவி புகார் ஒன்று கொடுத்து இருந்தார். அந்தப் புகாரில் தனது வீட்டுக்கு வந்த சிலர் தனது கணவரை இழுத்துச் சென்று அடித்து துன்புறுத்தியதாகவும், பின்னர் மொட்டை அடித்து, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து அசிங்கப்படுத்தினர் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், வாங்கிய அடியை தாங்க முடியாமல், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார் எனது கணவர். ஆனால், தண்ணீர் கொடுக்க மறுத்த அவர்களில் சிலர் அவர் மீது சிறுநீர் கழித்து குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். மேலும், தன்னையும் அடித்து, தன்னிடம் இருந்த தங்க நகைகளை வாங்கிக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இவரிடம் பெற்ற புகாரின் கீழ் 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில் அவர்களுக்குள் நடந்த பழைய பகை காரணமாக இவ்வாறு செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
மாவட்டக் கலெக்டர் ஞானரஞ்சன் தாஸ் கொடுத்திருக்கும் பேட்டியில், ''இதுபோன்ற சம்பவங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விசாரித்து அறிக்கை கொடுக்குமாறு துணை கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications