பழைய பகை... சிறுநீர் குடிக்க வைத்து... செருப்பு மாலை... விசாரணைக்கு உத்தரவு!!
பத்ரக்: ஒடிஸாவில் பழிக்குப் பழி வாங்கும் விதமாக மொட்டை அடித்து, சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய பத்ரக் மாவட்ட கலெக்டர் ஞானரஞ்சன் தாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஒடிஸாவில் பத்ரக் மாவட்டத்தில் பவுன்ஸ்பேக் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதுக்காரர். திஹிடி போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவரின் மனைவி புகார் ஒன்று கொடுத்து இருந்தார். அந்தப் புகாரில் தனது வீட்டுக்கு வந்த சிலர் தனது கணவரை இழுத்துச் சென்று அடித்து துன்புறுத்தியதாகவும், பின்னர் மொட்டை அடித்து, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து அசிங்கப்படுத்தினர் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், வாங்கிய அடியை தாங்க முடியாமல், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார் எனது கணவர். ஆனால், தண்ணீர் கொடுக்க மறுத்த அவர்களில் சிலர் அவர் மீது சிறுநீர் கழித்து குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். மேலும், தன்னையும் அடித்து, தன்னிடம் இருந்த தங்க நகைகளை வாங்கிக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இவரிடம் பெற்ற புகாரின் கீழ் 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில் அவர்களுக்குள் நடந்த பழைய பகை காரணமாக இவ்வாறு செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
மாவட்டக் கலெக்டர் ஞானரஞ்சன் தாஸ் கொடுத்திருக்கும் பேட்டியில், ''இதுபோன்ற சம்பவங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விசாரித்து அறிக்கை கொடுக்குமாறு துணை கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications