இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நசீம் ஜைதியும், தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதியும் உள்ளனர். ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்தது.

எனவே, அந்த இடத்துக்கு புதிய தேர்தல் ஆணையராக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். பிரிவு அதிகாரியான ஓம் பிரகாஷ் ராவத் நியமிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மத்திய அரசில் செயலாளராக பணியாற்றி வந்த ஓ.பி.ராவத் கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். மத்திய அரசிலும், மத்தியபிரதேச மாநில அரசிலும் பல்வேறு முக்கிய பதவிகளை அவர் வகித்து இருக்கிறார். வரும் 2018- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஓ.பி.ராவத் தேர்தல் ஆணையராக பதவி வகிப்பார்.
புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு இருப்பது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.ராவத் இந்த அரசியல் சாசன பதவியில் பாரபட்சம் இன்றி பணியாற்றப்போவதாக தெரிவித்தார்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஓம் பிரகாஷ் ராவத் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications