காதலர் தினம்.. பறக்க மறுத்த ஏர் இந்தியா விமான பணிப் பெண்கள்
டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான பணிப்பெண்களின் பொறுப்பின்மையால் நேற்று சிட்னி செல்ல வேண்டிய விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
வழக்கமாக விமானங்களில் சில நேரம் பயணிகள்தான் ஏதேனும் பிரச்சனைகளை உருவாக்குவார்கள்.இந்த முறை அதற்கு நேர்மாறாக அதன் ஊழியர்களால் விமானத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது இதுவே முதல் முறையாகும்.

காதலர்தினத்திற்கு முதல் நாளான நேற்று ஏர் இந்தியாவின் ஒரு விமான பணிப்பெண் தனக்கு அளிக்கப்பட்ட டெல்லி-சிட்னி விமானத்தில் பணிக்கு செல்ல முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார்.மேலும் தன்னுடைய உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் பயண தூரம் குறைவாக உள்ள துபாய் போன்ற இடங்களுக்கு போகத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரது சக ஊழியர்களான மேலும் இரண்டு பணிப்பெண்களும் அந்த விமானத்தில் செல்ல மறுத்துவிட்டனர். மற்றொருவரோ தாமதமாக வந்துள்ளார். இவர்களின் இந்த குழப்படியால், அவ்விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த நான்கு பேரிடமும் ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, இரண்டு பணிப்பெண்கள் தங்களுடைய பயண தூரம் முடிவடைந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
ஒருவர் டெல்லியின் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து கொண்டு உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார்.அவரை மருத்துவரை அனுப்பி சோதித்த போது அவர் நன்றாக இருப்பது தெரிய வந்துள்ளது.ஆனாலும் சிட்னி விமானத்தில் செல்ல அவர் மறுத்ததால் அவரை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிக பணி நீக்கம் செய்துவிட்டது.
நான்காவது பணிப்பெண் தாமதமாக வந்து சிட்னி விமானத்தில் சென்று விட்டார். ஏர் இந்தியா தற்போது மற்ற இருவரின் பயண தூரத்தை கணக்கிட்டு வருகிறது.பயண தூரம் முடிவடையாமல் இருந்தால் அவர்கள் இருவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நிதி நெருக்கடி, நஷ்டம், பணியாளர்கள் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல குழப்பங்களால் பாதிக்கப்பட்ட ஏர் இந்தியா, தற்போது இப்படிப்பட்ட பிரச்சினைகளையும் பயணிகளுக்கு கொடுக்க ஆரம்பித்துள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications