வெடித்ததா போர்? மாறிமாறி ஏவுகணை தாக்குதல்.. இந்தியா - பாகிஸ்தான் மோசமான மோதல் - பதற்றம்

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: நம் மீது பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு முதல் ட்ரோனை வைத்து தாக்கி வந்த பாகிஸ்தான் இப்பேது ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது. இதற்கு நம் நாடும் ஏவுகணையை பயன்படுத்த தொடங்கி உள்ளது. இருதரப்பும் மாறி மாறி ஒரே நேரத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் என்பது அதிகரித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றதற்கு பதிலடியாக கடந்த புதன் கிழமை பாகிஸ்தான் மீது நம் நாடு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் நம்மை தாக்க முயன்று வருகிறது.

pakistan india jammu Kashmir

நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் ஏவிய ஏவுகணை, ட்ரோன்கள், போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதையடுத்து நேற்று இரவு முதல் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தொடங்கியது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் கிராமங்கள், குடியிருப்புகள், விமான நிலையங்கள், ராணுவ முகாம்களை நோக்கி பாகிஸ்தான் ட்ரோன்களை அனுப்பியது.

மொத்தம் 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோனை அனுப்பியது. இந்த அனைத்து ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதையடுத்து இன்று காலையில் ஜம்மு காஷ்மீர் அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ட்ரோன் ஏவுதளத்தை நம் நாடு அழித்த நிலையில் இப்போது பாகிஸ்தான் ஏவுகணையை கையில் எடுத்துள்ளது. இதற்கு பதிலடியாக நம் நாடும் ஏவுகணையை கையில் எடுத்துள்ளது. இருநாடுகளும் மாறி மாறி எல்லையில் ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளதால் போர் பதற்றம் என்பது அதிதீவிரமாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+