உச்சகட்ட பதற்றம்: பதிலடி கொடுக்கும் இந்தியா.. காஷ்மீர் விரையும் ராணுவ தலைமை தளபதி
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் பரிதாபமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கிடையே பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், பல்வேறு தடை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பதற்றமான இந்த சூழலில், இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இன்று செல்கிறார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியாகியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சீத்தின் லஷ்கர் இ தொய்பாவின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பஹல்காமில் உள்ள புல்மேடு சுற்றுலாத் தலத்துக்குள் 4 பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து துப்பாக்கியால் சுட்டு சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இச்சம்பவம் இரு நாடுகளுக்கிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்திய பயங்கரவாதிகள், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களை வேட்டையாடுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பாகிஸ்தானியர்கள் விசா ரத்து, சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என தொடர்ந்து இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், நமது பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. சந்தேகத்திற்கிடமான இடத்தை நமது ராணுவத்தினர் நெருங்கிய நிலையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த துப்பாக்கிச்சூடு மோதல் சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தில் பசந்த்நகர் பகுதியில் நமது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று ஏற்பட்ட மோதலின் போது ஒரு ராணுவ வீரர் காயமடைந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த பதற்றமான சூழலுக்கு நடுவே, இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இன்று செல்கிறார். தாக்குதல் நடத்தப்பட்ட இடமான பஹல்காமை தலைமை தளபதி உபேந்திரா திவேதி பார்வையிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்சக்கட்ட பதற்றத்துக்கு இடையே ராணுவத் தளபதியின் காஷ்மீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications