இப்படியே போனால் பாகிஸ்தான் தானாகவே துண்டு துண்டாகிவிடும்.. அமைச்சர் ராஜ்நாத் சிங்
அகமதாபாத்: பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் சூரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசினார். அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
பாகிஸ்தானியர் யாரும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் செல்ல வேண்டாம் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு
தொடர்ந்து அவர்கள் எல்லை கோட்டு பகுதி வழியாக வந்தால் அவர்களை திரும்பி வர அனுமதிக்க மாட்டார்கள் என எச்சரித்தார். சுதந்திரத்துக்கு பிறகு இந்தியாவில் சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக இருந்தார்கள்.

உரிமை மீறல்கள்
தற்போதும் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். மக்களை நாம் ஜாதி, மத, பேத அடிப்படையில் பிரிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக உரிமை மீறல்கள் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகின்றன.

பாகிஸ்தான்
பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளையும் ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பாகிஸ்தான் தானாகவே துண்டு துண்டுகளாக சிதறிவிடும் என்றார்.

10 பயங்கரவாதிகள்
காஷ்மீர் பிரச்சினைக்கு பிறகு இந்தியாவில் தாக்குதலை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இதற்காக அந்நாட்டு ராணுவத்தினர் அவ்வப்போது இந்திய எல்லையில் ஊடுருவுகின்றனர். இவ்வாறு ஊடுருவி 10 பயங்கரவாதிகளை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் அனுப்ப திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications