இப்படியே போனால் பாகிஸ்தான் தானாகவே துண்டு துண்டாகிவிடும்.. அமைச்சர் ராஜ்நாத் சிங்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் சூரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசினார். அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

பாகிஸ்தானியர் யாரும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் செல்ல வேண்டாம் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

தொடர்ந்து அவர்கள் எல்லை கோட்டு பகுதி வழியாக வந்தால் அவர்களை திரும்பி வர அனுமதிக்க மாட்டார்கள் என எச்சரித்தார். சுதந்திரத்துக்கு பிறகு இந்தியாவில் சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக இருந்தார்கள்.

உரிமை மீறல்கள்

உரிமை மீறல்கள்

தற்போதும் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். மக்களை நாம் ஜாதி, மத, பேத அடிப்படையில் பிரிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக உரிமை மீறல்கள் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகின்றன.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளையும் ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பாகிஸ்தான் தானாகவே துண்டு துண்டுகளாக சிதறிவிடும் என்றார்.

10 பயங்கரவாதிகள்

10 பயங்கரவாதிகள்

காஷ்மீர் பிரச்சினைக்கு பிறகு இந்தியாவில் தாக்குதலை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இதற்காக அந்நாட்டு ராணுவத்தினர் அவ்வப்போது இந்திய எல்லையில் ஊடுருவுகின்றனர். இவ்வாறு ஊடுருவி 10 பயங்கரவாதிகளை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் அனுப்ப திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+