நானும் ரவுடிதான்.. மியான்மர் பயத்தை மறைக்க, வான்டடாக வந்து வாலாட்டும் பாகிஸ்தான்!
ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜம்மு மண்டலத்துக்கு உட்பட்ட பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் அமைந்துள்ள சவ்ஜியான் பகுதியில் இன்று காலை 9.15 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென தாக்குதலை தொடங்கியது. சிறிய மற்றும் தானியங்கி ரக ஆயுதங்களால் இந்த தாக்குதல் நடந்தது.

இதைத்தொடர்ந்து இந்திய ராணுவமும் திருப்பி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவம் கையாண்ட அதே ரக ஆயுதங்களால் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இவ்வாறு இரு தரப்புக்கும் இடையே நீடித்த இந்த சண்டை சுமார் 10 நிமிட நேரம் நீடித்தது.
இந்த தாக்குதல் சம்பவங்களில் இருபுறமும் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இருப்பினும் இந்திய வீரர் ஒருவர் காயமடைந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மியான்மரில் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இது மறைமுகமாக பாகிஸ்தானுக்கு எச்சரிக்கைவிடுப்பதாக அமைந்தது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசும்போது "மியான்மர் தாக்குதலை தொடர்ந்து உலக நாடுகள் இந்தியாவை பார்க்கும் தோரணை மாறிவிட்டது" என்று கூறியிருந்தார்.
அதேநேரம் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரோ, நாங்கள் ஒன்றும் மியான்மர் இல்லை, பாகிஸ்தான். எங்களிடம் இதெல்லாம் நடக்காது என்று இந்தியாவுக்கு எச்சரிக்கைவிடுத்திருந்தார்.
எனவே பாகிஸ்தான், தான் பயப்படவில்லை என்று காண்பிப்பதற்காக இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக தாக்குதலை நிறுத்தியிருந்த நிலையில் இன்று இத்தாக்குதல் அரங்கேறியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications