நாசவேலைக்கு சதியா? ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த பாக். மீன்பிடி படகு..சுற்றி வளைத்த இந்திய கடற்படை
அகமதாபாத்: இந்திய கடல் பகுதிக்குள் பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகை சுற்றி வளைத்த இந்திய கடற்படை படகில் இருந்த 10 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறது.
ஏதேனும் நாச வேலை சதித்திட்டத்துடன் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் படகு நுழைந்ததா என்ற கோணத்திலும் குஜராத் பயங்கராவத தடுப்பு பிரிவு மற்றும் கடல்படை அடங்கிய பாதுகாப்பு குழு விசாரணை நடத்துவதாக தெரிகிறது.
அரபிக்கடலில் இந்தியாவுக்குச் சொந்தமான கடற்பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்து ஆயுதங்கள் மற்றும் போதை பொருள் கடத்தல் முயற்சியில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சில கும்பல்கள் அடிக்கடி முயற்சித்து வருகின்றன.

இந்திய கடலோர காவல்படை
இதுபோன்ற சட்ட விரோத செயல்களை கண்காணிக்க இந்திய கடற்படையும் அரபிக்கடலில் உள்ள இந்திய கடற்பரப்பில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அரபிக்கடல் பகுதியில் அவ்வப்போது பாகிஸ்தான் மீனவர்களும் அத்துமீறி நுழைந்து விடுகின்றனர். அவர்களையும் இந்திய கடலோர காவல் படை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல போதைப்பொருள் கும்பலும் ஆயுதக்கடத்திலில் ஈடுபடும் நபர்களும் இந்திய எல்லைக்குள் மீன்பிடி படகுகளில் ஊடுருவ முயற்சிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் மீன் பிடி படகு
அந்த வகையில் இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி பாகிஸ்தான் மீன் பிடி படகு ஒன்று நுழைந்தது. இதைக் கவனித்த குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் அடங்கிய சிறப்பு குழு அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படைகை சுற்றி வளைத்தது. இந்தப் படகில் பயங்க வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் இருந்தை கடலோர காவல் படையினர் கைப்பற்றினர்.

10 பேரிடம் விசாரணை
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.300 கோடி இருக்கும் என்று கடலோர பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். பாகிஸ்தான் படகில் இருந்த 10 பேரையும் கைது செய்துள்ள இந்திய கடலோர காவல் படை, விரிவான விசாரணைக்காக ஒகா பகுதிக்கு படகை இழுத்து வந்தனர். ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகில் இருந்த 10 பேரிடம் விசாரணை நடப்பதாக தெரிகிறது. விசார போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் தொடர்பான பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முறியடிக்கும் முயற்சியில்..
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 7 முறை இதுபோல கடத்தல் முயற்சிகள் நடைபெற்று இருப்பதாக கடலோர பாதுகாப்பு வட்டாரங்கள் சொல்கின்றன. கடந்த 3 மாதங்களில் மட்டும் 3-வது முறையாக இதுபோன்ற போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைய முயன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தியாவுக்குள் ட்ரோன் மூலமாக ஒருபக்கம் போதைப்பொருளை கடத்த முயற்சிக்கும் பாகிஸ்தான் மற்றொரு பக்கம் கடல் பகுதி வழியாகவும் கடத்தி கொண்டு வர போதைபொருள் கும்பல்கள் முயற்சித்து வருகின்றன. இந்த கும்பல்களின் முயற்சியை எல்லை பாதுகாப்பு படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை தீவிரமாக கண்காணித்து முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications