நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18-ல் தொடங்குகிறது
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரும் ஜூலை 18-ந் தேதி கூட இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 22-ந்தேதி கூடியது. அன்றைய கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். அதன்பிறகு பிப்ரவரி 25-ந்தேதி ரயில்வே பட்ஜெட்டும், 29-ந்தேதி 2016-17-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.
பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அமர்வாக நடத்தப்பட்டது. முதலாவது அமர்வு பிப்ரவரி 22-ந்தேதி முதல் மார்ச் 16-ந்தேதி வரையும் 2-வது அமர்வு ஏப்ரல் 25-ந்தேதி முதல் மே 13-ந்தேதி வரையும் நடைபெற்றன.

ஜூலை 18-ல் தொடக்கம்
இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை வருகிற ஜூலை மாதம் 18-ந்தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் மாதம் 13-ந்தேதி வரை இக்கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. மத்திய அமைச்சரவையின் நாடாளுமன்ற விவகார கமிட்டி கூடி வரும் 29-ந் தேதி கூடி முடிவெடுக்க உள்ளது.

ஜிஎஸ்டி மசோதா
இந்த கூட்டத்தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சரக்கு மற்றும் சேவைவரி மசோதா நீண்ட காலமாக நிறைவேறாமல் நிலுவையில் உள்ளது.

திருத்திய அரசு
எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் நிறைவேற்ற முடியவில்லை. மசோதாவில் பல்வேறு திருத்தங்களை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு மசோதாவில் திருத்தங்கள் செய்துள்ளது.

ஆதரவு கிடைக்குமா?
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஒரு மித்த ஆதரவை திரட்டும் முயற்சியில் மூத்த மத்திய அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். லோக்சபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருந்த போது ராஜ்யசபாவில் போதிய ஆதரவு இல்லாததால் இந்த மசோதா நிறைவேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியான அதிமுக மேலும் திருத்தங்களைக் கோரி வரூகிறது. அண்மையில் நடந்த சட்டசபை தேர்தல்களுக்குப் பின் ராஜ்யசபாவில் பா.ஜ.க பலம் சற்று அதிகரித்துள்ளது. இதனால் எதிர்க் கட்சிகளின் ஆதரவை பெற பாஜக முயற்சித்து வருகிறது. நிலுவையில் உள்ள பல மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications