நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடர் நாளை கூடுகிறது.. புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் மும்முரம்!!
டெல்லி: நடப்பு நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. இதில் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன.
லோக்சபா தேர்தல் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை பல கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளுமே வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றன.
காங்கிரஸ், பாரதிய ஜனதா இல்லாமல் இடதுசாரிகள், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம் உள்பட 14 கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியையும் உருவாக்கி உள்ளன. இந் நிலையில் நடப்பு 15-வது நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடர் நாளை கூடுகிறது.

நாளை தொடங்கி வரும் 21-ந்தேதி வரை 5 அமர்வுகளாக இக்கூட்டத் தொடர் நடைபெற இருக்கிறது. இத்தொடரை அமைதியாக நடத்துவதற்காக மத்திய அமைச்சர் கமல்நாத் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.
இறுதி கூட்டத்தொடரில் மொத்தம் 39 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் தெலுங்கானா, ஹெலிகாப்டர் பேர ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications