நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 12வது நாள்: இன்று அவையில் என்ன நடக்கும்?
டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்ட் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்டிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
12 எம்பிக்கள் சஸ்பெண்டை எதிர்த்து நேற்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்த நிலையில் மக்களவை குளிர்கால கூட்டத்தொடரின் 12வது நாளான இன்றும் அவையில் எம்பிக்கள் சஸ்பெண்ட் குறித்த பிரச்சனை எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று அவையில் பாஜக எம்பி கிரோரி லால் மீனா இந்தியாவின் தேசிய விலங்காக பசுமாட்டை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதேபோல் பாராளுமன்றத்தில் அரசு கொடுத்த விளக்கத்தில், வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணம் குறித்த மொத்த அளவு இதுவரை கணக்கிடப்படவில்லை என மத்திய அரசு லோக்சபாவில் அறிவித்தது.
மக்களவை
இன்று மக்களவையில், மக்களிடம் இருந்து வரிப்பணத்தை வாங்கும் Consolidated Fund of India அமைப்பில் சில அடிப்படை மாற்றங்களை செய்யும் வகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மசோதா தாக்கல் செய்ய உள்ளார். அதேபோல் விலைவாசி உயர்வு குறித்த பிரச்சனைகளை இன்று எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளது.
மாநிலங்களவை
அதேபோல் மாநிலங்களவையில், போதை பொருள் தடுப்பு பிரிவு தொடர்பான சட்ட திருத்த மசோதா 2021 தாக்கல் செய்யப்பட உள்ளது. அதேபோல் மாநிலங்களவையில் ஓமிக்ரான் கொரோனா குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications