ஓடும் ரயிலில் குழந்தை பெற்ற பெண்... உதவிக்கு வராமல் வேடிக்கை பார்த்த பயணிகள்.. மும்பையில்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் ஓடும் ரயிலில் அழகிய குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் பெண் ஒருவர். ஆனால், வலியால் துடித்த அவருக்கு உதவி செய்யாமல் மற்ற பயணிகள் வேடிக்கை பார்த்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை கல்யாண் பகுதியில் மாலை 3.30 மணியளவில் ரயிலில் ஏறியுள்ளனர் ராம்லால் பால் என்பவரும், அவரது மனைவி சுதேவியும். நிறைமாதக் கர்ப்பிணியான சுதேவியை கே இ எம் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அனுமதிக்க அவர்கள் புறப்பட்டுள்ளனர்.

Passengers Sat and Watched as Woman Delivered Baby in Mumbai Local

ஆனால், ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அப்பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுவிட்டது. வலியால் துடித்த அப்பெண்ணிற்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. சில பெண்கள் உட்பட அனைவரும் அதனை வேடிக்கைப் பார்த்துள்ளனர்.

இதனால் ஓடும் ரயிலிலேயே சுதேவிக்கு அழகிய குழந்தை பிறந்தது. குழந்தையை கையில் ஏந்தியபடி செய்வதறியாது திகைத்துள்ளார் ராம்லால். அப்போதும் யாரும் அவருக்கு உதவவில்லை.

இந்நிலையில், அதே பெட்டியில் பயணம் செய்த பத்திரிகையாளர் இக்பால் அன்சாரி, இது தொடர்பாக தகவல் அறிந்து ராம்பால் அருகே வந்துள்ளார். நிலைமையைப் புரிந்து கொண்டு உடனடியாக ரயில்வேயின் அவசர எண்ணை அழைத்துள்ளார். முதல் எண் கிடைக்காத நிலையில், இரண்டாம் எண்ணில் தொடர்பு கிடைத்துள்ளது.

உடனடியாக அங்குள்ள நிலையை அவர் விளக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து உடனடியாக அபாயச் சங்கிலியை இழுத்து அடுத்துள்ள கஞ்சுர்மார்க் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்துமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படியே, அடுத்து வந்த ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது அங்கு மருத்துவக் குழு தயாராக இருந்தது. உடனடியாக சுதேவி ராஜவாடி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவக் குழுவைப் பார்த்ததும் சில பயணிகள் சுதேவியை ஸ்டெச்சரில் ஏற்ற உதவி செய்துள்ளனர்.

தற்போது சுதேவியும், குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இருவரும் நலமாக இருப்பதாகவும் ராம்பால் தெரிவித்துள்ளார். மேலும், தக்க சமயத்தில் உதவி செய்த பத்திரிகையாளர் அன்சாரிக்கும் அவர் நன்றித் தெரிவித்துள்ளார்.

ஒடும் பேருந்தில் பலாத்காரம் நடந்தால் தட்டிக் கேட்க மாட்டார்கள் என்றால், பிரசவம் நடந்தால் கூட உதவ மறுக்கிறார்கள் நம் மக்கள். மக்கள் மனது அந்தளவிற்கு மரத்துப் போய் விட்டதா என்றே கேட்கத் தோன்றுகிறது இத்தகைய சம்பவங்களைப் பார்க்கும் போது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+