இன்டர்சிட்டி ரயில் விபத்தால் பெங்களூர் செல்ல முடியாமல் நடுவழியில் பரிதவித்த பயணிகள்!!

Subscribe to Oneindia Tamil

ஆனைக்கல்: பெங்களூரு- எர்ணாகுளம் இன்டர்சிட்டி விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தால் சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு ரயில் சென்ற பயணிகள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கானோர் பரிதவித்துப் போயினர்.

ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் நேற்று காலை ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

People’s daily life suffered due to Bangalore derail incident

இதனால் சேலம் - பெங்களூரு நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை - கெலமங்கலம் இடையே பெரிய நாகதுணை என்கிற இடத்தில் நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக ஓசூர், பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஓசூருக்குச் சென்றனர்.

இது குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ராஜேஷ், சிறப்பு பேருந்துகளை இயக்க அறிவுறுத்தினார். அதன் பின்னர் பெரிய நாகதுணையில் பரிதவித்து நின்ற பயணிகள் பேருந்துகள் மூலம் ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+