பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 அதிரடி குறைப்பு... நள்ளிரவு முதல் அமல்...
டெல்லி : பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. விலைக் குறைப்பு நள்ளிரவு முதல் அமலாகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது.

அதன்படி இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
பெட்ரோல், மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி வரிகளின் அடிப்படையில் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. ரூ.2.55 குறைந்து ரூ.67.29 க்கு விற்பனையாகிறது. இதே போன்று டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.2.44 குறைந்து ரூ.51.08 க்கு விற்பனையாகியது.
இறுதியாக கடந்த ஜுன் மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 71 காசுகளும் குறைக்கப்பட்டன. அதன் பின்னர் தற்போது பெட்ரோல், டீசல் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications