60 வயது மூதாட்டியை விரட்டி விரட்டி கடித்துக் குதறும் பன்றிகள்.. தீயாய் பரவும் வைரல் வீடியோ
60 வயது மூதாட்டியை வெறிப்பிடித்த பன்றிகள் 2 விரட்டி விரட்டி கடித்துக் குதறின. இதில் 60 வயது மூதாட்டி படுகாயம் அடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
Recommended Video

நெல்லூர்: 60 வயது மூதாட்டியைப் பன்றிகள் 2 விரட்டி விரட்டிக் கடித்து குதறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காவாலி நகரத்தில் இந்த கோரம் சம்பவம் நடந்துள்ளது. சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில் 60 வயது பெண் ஜானி சாலையில் நடந்து வந்து செல்கிறார்.
அவரைத் துரத்திக் கொண்டு இரண்டு பன்றிகள் ஓடி வருகின்றன. மூதாட்டியை முட்டி சாலையில் தள்ளிய பன்றிகள், அவரைக் கடித்து குதறத் தொடங்குகின்றன.

பன்றிகளுடன் மூதாட்டி போராட்டம்
மூதாட்டியால் எழுந்திருக்கக் கூட முடியாமல் போராடுகிறார். சற்று நேரத்தில் பரபரப்பாக மாறிய அந்தச் சாலையில், பன்றிகளை சிலர் கல்லெறிந்து விரட்ட முயற்சிக்கின்றனர்.

தடி கொண்டு விரட்டி
அதனால் கொஞ்சம் ஜகா வாங்கி அந்தப் பக்கம் ஓடிய பன்றியிடம் இருந்து தப்பித்து எழுந்திருக்கும் ஜானியை மீண்டும் கவ்விக் கடிக்க பன்றிகள் ஒடி வருகின்றன. சம்பவ இடத்திற்கு 2 சக்கர வாகனத்தில் வரும் இரண்டு இளைஞர்கள் பெரிய தடி கொண்டு பன்றியை விரட்டுகின்றனர்.
வைரல் வீடியோ
இதில், இன்னும் சிலர் கல்லால் அடித்தும் துரத்தினர். பன்றி விலகியதும் தப்பித்தோம் பிழைத்தோம் என ஜானி நடக்க முயற்சி செய்கிறார். படுகாயம் அடைந்த அவரை மற்றொரு பெண் கைதாங்கலாக அழைத்துச் செல்கிறார். பதற வைக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிகிச்சை
வெறி கொண்ட பன்றிகள் இந்தப் பாட்டியை மட்டுமல்லாமல் ஒரு சிறுவனையும் கடித்துக் குதறியுள்ளது. 3 வயதான கோட்டீஸ்வர ராவ் என்ற சிறுவனும், ஜானியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications