நான் எமோஷனல் ஆனால் மன்னிச்சிருங்க.. ராகுல் காந்தி பதவியேற்பு விழாவில் நா தழுதழுத்த மன்மோகன்சிங்
Recommended Video

டெல்லி: ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற விழாவில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உணர்ச்சிமிகுதியில் உரையாற்றினார்.
மன்மோகன்சிங் பேசியதாவது: இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள். நான் எமோஷனல் ஆனால் தயவு செய்யது என்னை மன்னித்துவிடுங்கள்.
சோனியா காந்தி தலைவராக இருந்தபோது காங்கிரஸ் கட்சிக்கு பலம் ஊட்டினார்.

10 வருடங்கள் ஆட்சி
நான் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக சோனியாவுடன் பணியாற்றியுள்ளேன். 10 வருடங்கள் பிரதமராக இருந்தபோது சோனியா அறிவுரையை பெற்று செயலாற்றினேன். எங்களது 10 வருட ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக இருந்தது.

நீண்ட கால பயிற்சி
சோனியாவின் வழிகாட்டுதல் படி எங்கள் அரசு பல சிறப்புமிக்க முடிவுகளை எடுத்தது. ராகுல் காந்தியும் திறமையானவர். நீண்ட காலமாக அவர் அரசியல் பயிற்சியில் உள்ளார்.
|
இடையூறுகள்
காங்கிரசின் பல்வேறு செயல்பாடுகளை ராகுல் மேற்கொண்டிருந்தார். நாட்டின் அரசியலில் சில இடையூறுகள் தென்படும் இந்த சூழ்நிலையில் ராகுல் காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல உயரம்
காங்கிரஸ் கட்சி இன்னும் பல உயரங்களை ராகுல் காந்தி தலைமையில் பெறும். இவ்வாறு மன்மோகன்சிங் தெரிவித்தார். ராகுல் காந்தி பதவியேற்றதை காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதால் தலைவர்களின் பேச்சு அடிக்கடி தடைபட்டது.












Click it and Unblock the Notifications