ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டம்... மோடி அறிவிப்பைத் தொடர்ந்து மாஜி ராணுவத்தினர் உண்ணாவிரதம் வாபஸ்
டெல்லி: விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும் ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தின் பலன் கிடைக்கும் என பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னாள் ராணுவத்தினர் வாபஸ் பெற்றுள்ளனர்.
ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி டெல்லி ஜந்தர்மந்திரில் கடந்த 88 நாட்களாக முன்னாள் ராணுவத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் பலரின் உடல்நலம் பாதிக்கப் பட்டது. ஆனபோதும், போராட்டத்தைக் கைவிட அவர்கள் மறுத்து வந்தனர்.

போராட்டம் தீவிரமடைந்ததால், பிரதமரின் சுதந்திர தின உரையில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று இந்தப் போராட்டம் தொடர்பாக அமித்ஷா தலைமையில் பாஜக தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டம் குறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் வெளியிட்டார்.
ஆனால், தங்களின் கோரிக்கைகள் பலவற்றை அரசு நிராகரித்து விட்டதாகக் கூறி முன்னாள் ராணுவத்தினர் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்நிலையில் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, "ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் விவகாரத்தில் அரசின் அறிவிப்பை வைத்து சிலர் முன்னாள் ராணுவத்தினரை தவறாக வழிநடத்துகின்றனர். யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தின் பலன் கிடைக்கும்" என அறிவித்தார்.
மோடியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தங்களது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் போராட்ட குழுவின் பிரதிநிதி சத்பிர் சிங் தெரிவித்துள்ளார். ஆனபோதும், பிரதமர் அளித்த வாக்குறுதியை எழுத்துப்பூர்வமாக அளித்தால்தான் நாங்கள் முழு அளவில் போராட்டத்தை கைவிடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications