பாக். மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி 'சுதந்திர தின' வாழ்த்துகள்
டெல்லி: காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதம நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவி தீவிரவாதிகள் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் ஒரு தீவிரவாதி உயிரோடு பிடிபட்டுள்ளான். அவன் விசாரணக்காக டெல்லி கொண்டுவரப்படுகிறான்.
இதேபோல் பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பகுதியான குர்தாஸ்பூரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி பொதுமக்கள் மற்றும் போலீசார் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். எல்லைப் பகுதிகளில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதால் பாகிஸ்தானுடனான நட்புறவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
Greetings & good wishes to the people of Pakistan on their Independence Day.
— Narendra Modi (@narendramodi) August 14, 2015
மேலும் பாகிஸ்தானில் செப்டம்பர் 30-ந் தேதியன்று காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு ஜம்மு காஷ்மீர் சட்டசபை சபாநாயகர் அழைக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடும் பாகிஸ்தான் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.