எல்லையில் நிலவும் பதட்டம்.. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் மோடி ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதட்டமான சூழல் தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.

கடந்த மாதம் 18-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் யூரி ராணுவ முகாமில் நுழைந்து நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 19 பேர் வீர மரணம் அடைந்தனர். அதன்சுவடுகள் மறைவதற்கு முன்பே, மறுபடியும் காஷ்மீரிலும், இந்திய நகரங்களிலும் தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே முகாமிட்டு சதி செய்த தகவல் வந்ததது.

PM Modi meets President

இந்தியா, ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தியது. அதில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 38 பயங்கரவாதிகளும், 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.

இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லையோரம் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக குடியரசு தலைவர் மாளிகையில் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி இன்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது எல்லையில் நிலவி வரும் பதற்றம் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+