Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Breaking News: உலகின் உயரமான சர்தார் பட்டேல் சிலையை திறந்து வைத்தார் மோடி

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: உலகின் அதி உயரமான சிலையான, இந்தியாவின் இரும்பு மனிதர், சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அவரது 143வது பிறந்த நாளான இன்று, குஜராத்தில், பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது.

Statue of Unity என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த சிலை உயரம், 182 மீட்டர்கள். அதன் அடித்தளம் 58 மீட்டரையும் சேர்த்தால் மொத்தம் 208 மீட்டர் உயரத்திற்கு மக்கள் தலைநிமிர்ந்து பார்க்க வேண்டியிருக்கும். 6.5 ரிக்டர் அளவுகோல் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டாலும் சேதமடையாத வகையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

PM Modi to unveil Sardar Patels Statue of unity today - Live updates

Oct 31, 2018, 10:53 am IST

வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமராக திறப்பதில் பெருமை கொள்கிறேன்-மோடி பேச்சு

சிலையை நிறுவ திட்டமிட்டபோது நான் பிரதமராவேன் என்று நினைக்கவில்லை

Oct 31, 2018, 10:41 am IST

உலகின் உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை

Oct 31, 2018, 10:27 am IST

பட்டேல் சிலை திறப்பு விழாவில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு

தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் பங்கேற்பு

Oct 31, 2018, 10:25 am IST

ஒடிசாவின் புரி கடற்கரையில் பட்டேலுக்கு மணலால் சிற்பம் வடித்த சுதர்ஷன் பட்நாயக்
Oct 31, 2018, 10:23 am IST

குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழா துவங்கியது

பட்டேல் சிலையை திறக்க வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி

Oct 31, 2018, 10:13 am IST

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மொத்தம் ரூ.2,989 கோடி செலவிடப்பட்டுள்ளது

ஆண்டுதோறும் பராமரிப்பு செலவாக ரூ.43.8 கோடி ஒதுக்கப்படும்

மத்திய அரசு, ஒஎன்ஜிசி, பிபிசிஎல், இந்தியன் ஆயில், ஓஐஎல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சிலைக்கான செலவை ஏற்றுள்ளன

சிலையை உருவாக்க 3 வருடங்கள், 9 மாதங்கள் ஆகியுள்ளன

Oct 31, 2018, 10:12 am IST

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மகாத்மா காந்தி சிலையை வடிவமைத்த பத்ம ஸ்ரீ & பத்ம பூசன் விருதுகள் பெற்ற சிற்பி ராம் வன்ஜி சுதர்தான் பட்டேல் சிலையை வடிவமைத்தார்

எல்அன்டுடி, சீனாவின் ஜியான்க்ஜி மெட்டல் நிறுவனம், துபாயின் உயரமான புர்ஜ் கலிபா கட்டிடத்தை

உருவாக்கிய மலேசியாவின் எவர்சென்டை ஆகியவை சிலை தயாரிப்பில் ஈடுபட்டன

மொத்தம் 3400 தொழிலாளர்கள் சிலை உருவாக்கத்தில் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+