69வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்!
டெல்லி: நாட்டின் 69வது சுதந்திர தினத்தையொட்டி பிரதம நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் இன்று தேசியக் கொடியை பலத்த பாதுகாப்புடன் ஏற்றினார். பிரதமர் நரேந்திர மோடி தமது பதவி காலத்தில் 2வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றியுள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் டெல்லி செங்கோட்டை வருகை தந்தார்.

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடிக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர் 21 குண்டுகள் முழங்க பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின சிறப்பு உரையாற்றினார். பொதுவாக செங்கோட்டையில் கடந்த காலங்களில் குண்டுதுளைக்காத மேடையில்தான் பிரதமர்கள் உரையாற்றுவர். ஆனால் கடந்த முறை முதல் முறையாக இந் சம்பிரதாயத்தைப் பிரதமர் மோடி உதறினார். அதைப் போல இம்முறையும் குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படாமல் சாதாரண மேடையில் நின்றே பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.
PM Modi unfurls the national flag at Red Fort pic.twitter.com/v86gF13bxf
— ANI (@ANI_news) August 15, 2015 சுதந்திர தின விழாவின் போது தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்பதால் தலைநகர் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications