அனைத்து மாநிலங்களிலும் பசுவதைத் தடுப்புச்சட்டம்? மத்திய அரசு தீவிரம்
டெல்லி: பசுவதைத் தடுப்புச்சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்திலிருந்து சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் குஜராத்தில் கொண்டுவரப்பட்ட பசுவதைத் தடுப்புச்சட்டத்தை அனைத்து மாநிலங்களுக்குமான மாதிரிசட்டமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பசுவதையைத் தடுப்பது குறித்து அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்களை ஆராயுமாறும், பிரிவு 48ன்படி பசுவதையை தடுப்பதற்கு மாநில அரசுகள் தனித்தனியாக சட்டம் கொண்டுவரலாம் என்று கூறப்பட்டுள்ளதை பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. குஜராத் அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்தை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி அதே பாணியில் சட்டம் இயற்றுமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொள்ளும் வாய்ப்பு குறித்து ஆராயுமாறு சட்ட அமைச்சகம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குஜராத் அரசு நிறைவேற்றிய சட்டம் செல்லும் என்று 2005ம் ஆண்டுஉச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது அந்தக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உ.பி., ஜார்க்கண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் பசுவதைத் தடுப்புச்சட்டம் அமலில் உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அண்மையில் இதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஹரியானா மாநில அரசு பசுவதைத் தடுப்புச்சட்டம் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications