பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி ஊழல்: 15 நகரங்களில் அமலாக்கத்துறையினர் ரெய்டு
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஊழல் புகாரில் 15 நகரங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11,400 கோடி ரூபாய் ஊழல் புகார் தொடர்பாக நாட்டின் 15 நகரங்களில் 46 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடியாக பண பரிமாற்றம் செய்தது தொடர்பாக வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் மற்றும் வங்கி ஊழியர்கள் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மோசடி புகாருக்கு ஆளாகியுள்ள நீரவ் மோடி கடந்த மாதமே தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நீரவ் மோடி மற்றும அவரது மனைவி ஆகிய இருவரையும் கண்காணிக்கப்படும் நபர்களாக சிபிஐ ஏற்கெனவே அறிவித்துள்ளது. மேலும் அவர்களைக் கைது செய்ய இண்டர்போலின் உதவியையும் சிபிஐ நாடியுள்ளது.
வங்கி மோசடிக்கு உதவியதாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையின் ஓய்வு பெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, வங்கி ஊழியர் மனோஜ் காரத் மற்றும் நீரவ் மோடி நிறுவன ஊழியர்களை சிபிஐ கைது செய்துள்ளது.
இதனிடையே நீரவ் மோடி தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். மும்பை, டெல்லி உட்பட நாடுமுழுவதும் பல நகரங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
மொத்தம் 15 நகரங்களில் 46 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நீரவ் மோடிக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கவும் அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications