50 வருட போராட்ட வாழ்க்கையில் முதல் முறை.. போலீசிடம் அடி வாங்கிய வாட்டாள் நாகராஜ் #cauvery
பெங்களூர்: தனது 50 வருட போராட்ட வாழ்க்கையில் முதல் முறையாக போலீசார் தன்னை தாக்கிவிட்டதாக கூறி கன்னட அமைப்பினரை தூண்டிவிட்டுள்ளார் கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ்.
காவிரி விவகாரத்திற்காக கடந்த திங்கள்கிழமை பெங்களூரில் கன்னட அமைப்பிர் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. தாமதமாக விழித்துக் கொண்ட காவல்துறை 16 காவல் சரகங்களில் ஊரடங்கு உத்தரவையும், மொத்த பெங்களூருக்கும் 144 தடையுத்தரவையும் பிறப்பித்தது.

ஊரடங்கு உத்தரவு நேற்று காலை முதல் விலக்கிக்கொள்ளப்பட்டாலும், 144 தடையுத்தரவு வரும் 25ம் தேதிவரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4 பேருக்கு மேல் மொத்தமாக கூடினாலே கைது செய்ய இந்த சட்டப்பிரிவு வகை செய்கிறது.
இந்நிலையில், பெங்களூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற, கன்னட போராட்டக்காரர் வாட்டாள் நாகராஜ் இன்று கைது செய்யப்பட்டார். போராட்டம் முடக்கப்பட்டது. வாட்டாளும், அவருடன் சேர்ந்த போராட்டக்காரர்களும், மைசூர் சாலையிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், நிருபர்களிடம் வாட்டாள் கூறியதாவது: என்னை கைது செய்தபோது, இரு போலீஸ்காரர்கள் என் தலைமீது குறிவைத்து அடித்தனர். எனது, 50 வருட போராட்ட வாழ்க்கையில் முதல் முறையாக போலீசார் என்னை அடித்துவிட்டனர்.
காவிரிக்காக போராடிய போராட்டக்காரர்களை, போலீசார் விடுதலை செய்யாவிட்டால், மீண்டும் கர்நாடகா பந்த் நடத்த அழைப்புவிடுக்கப்படும் என்றார் வாட்டாள் நாகராஜ்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications