திரிபுரா முதல்வர் பெயரில் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்- போலீசார் விசாரணை
Subscribe to Oneindia Tamil
அகர்தலா: திரிபுரா முதல்வர் பெயரில் வலம் வரும் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட் குறித்து அம்மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திரிபுரா முதல்வர் மாணிக் சர்கார் பெயர்ல் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணிக் சர்காரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த அக்கவுண்ட்டை தொடங்கியவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில காவல்துறை தலைவர் கே. நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் மாணிக் சர்க்கார் பெயரிலான போலி அக்கவுண்ட் குறித்து நாங்களே புகார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications