For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுகிறது: பிரவீண்குமார்

By Mayura Akilan
|

சென்னை: தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது என தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியுள்ளார்.

சென்னை கீழ்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வாக்களிக்க வந்தார்.

Polling in TN peaceful says Praveen Kumar

அப்போது பிரவீண் குமாரிடம் வாக்காளர்கள் வாக்குவாதம் செய்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என ஏராளமான வாக்காளர்கள் முற்றுகையிட்டனர்.

அவர்களை சமாதானம் செய்த பிரவீண்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது என்றார்.

சென்னை முழுவதும் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், எங்கேயாவது பிரச்னை எனத் தெரிந்தால் உடனே பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார். 6 மணிக்குள் வந்தால் வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்பும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என அவர் கூறினார்.

English summary
Voting for 39 Lok Sabha seats in Tamil Nadu Thursday is underway peacefully, an CEO PraveenKumar said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X