கால் டாக்ஸியின் இளம் பெண் பலாத்காரம்: டெல்லி நகர வீதிகளில் உலா வரும் ஆளில்லா விமானங்கள்
டெல்லி: கால் டாக்ஸியில் இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தையொட்டி டெல்லி நகர வீதிகளில் இரவு நேரங்களில் கேமரா பொருத்தப்பட்ட ஆள் இல்லாத சிறிய ரக விமானங்கள் பயன்படுத்தி கண்காணிப்பில் ஈடுபட டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளது.
டெல்லியில் கடந்த வாரம் உபேர் நிறுவனத்தின் கால் டாக்ஸியில் சென்ற தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் டாக்ஸி டிரைவராலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த டாக்சி டிரைவர் ஷிவ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மேலும் பல பெண்கள் தற்போது புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உபேர் டாக்ஸி நிறுவனத்திற்கு நாடு முழுவதும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேரங்களில் நடக்கும் இது போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க டெல்லி போலீசார் கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா சிறிய ரக விமானங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த பறக்கும் கேமராக்கள் அடுத்த மாதம் முதல் டெல்லியின் வடக்கு பகுதியில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள பொருட்களையும் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் உடையவை இதன் மூலம் 360 டிகிரியில் சுமார் 4 கிமீ வரை கண்காணிக்க முடியும்.
இவை படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு டெல்லியின் அனைத்து தெருக்களையும் கண்காணிக்க பயன்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும். இதற்காக டெல்லி நிர்வாகத்திடம் இருந்து நாள் ஒன்றிற்கு ரூ.50 ஆயிரம் வாடகையில் இது போன்ற சிறிய ஆள் இல்லா விமானங்களை வாங்க காவல்துறை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பல்வேறு இடங்களில் மறைமுக கேமராக்களைப் பொருத்தி இதுபோன்ற கண்காணிப்பு பணிகளை டெல்லி காவல்துறை செய்து வருகிறது என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications