வேற்றுமைகளைக் கொண்டாடும் சகிப்புத் தன்மை தேவை: ஜனாதிபதி பிரணாப் மீண்டும் வலியுறுத்தல்
கொல்கத்தா: நாட்டு மக்கள் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிப்பதுடன், மாற்றுக் கருத்துகளை ஏற்றுக் கொள்ளும், வேற்றுமைகளைக் கொண்டாடுகிற மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மாட்டிறைச்சியை மையமாக வைத்து நாடெங்கிலும் நடைபெறும் மோதல்கள், பாகிஸ்தானை எதிர்ப்பதாகக் கூறி மும்பையில் சிவசேனைக் கட்சியினர் நடத்தும் தாக்குதல்கள் உள்ளிட்ட சம்பவங்களால் நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக பரவலான கருத்து எழுந்துள்ளன.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கிர்நகரில் உள்ள இல்லத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரணாப் முகர்ஜி அளித்த பேட்டி:
பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு கடந்த வாரம் நான் சுற்றுப்பயணம் சென்றிருந்தேன். அப்போது, ஏராளமான மொழிகள், பல வகையான மதங்கள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் உள்ள இந்தியாவில் பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயகம் எப்படி வெற்றிகரமாகச் செயல்படுகிறது? என்ற கேள்வியை என்னிடம் முன்வைத்தனர்.
அப்போது, அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்திய நாகரிகம் எங்களுக்கு உணர்த்தி வருகிறது. எனவேதான், வேறுபாடுகளை நாங்கள் கொண்டாட முடிகிறது.
சகிப்புத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும், மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதைத்தான் இந்திய நாகரிகம் கற்பித்திருக்கிறது. நம்மை ஒற்றுமையுடன் இயங்கச் செய்ய அதுவே முக்கியமானதாகும்.
சகிப்புத்தன்மை என்பதை மனதளவில் உணர்வது அவசியம். நமது நடவடிக்கைகளில், அன்றாட பழக்க வழங்கங்களிலும் சகிப்புத்தன்மையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
-
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இந்தியாவுக்கு வெடி வைத்த டிரம்ப்! அமெரிக்காவால் நமக்கு தொட்டதெல்லாம் நஷ்டம் தான்! -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
“ஒரு டான்ஸ் ஆடியது குத்தமா.. அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்.. என்ன இப்படி ஆகிடுச்சு -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
IND Vs NZ: மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை.. வாய் பேசிய சான்ட்னரை வாயடைக்க வைத்த இந்தியப் படை! -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
இந்த ரெக்கார்டு போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா! பல ஆண்டு ரொக்கார்டுகளை சல்லி சல்லியாக உடைத்த SKY படை! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு!












Click it and Unblock the Notifications