For Daily Alerts
Just In
தோற்றுப் போன ஐ.மு.கூ அமைச்சர்களுக்கு மீன், சிக்கன் கொடுத்து விருந்தளித்த பிரணாப்!
டெல்லி: மன்மோகன் சிங் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிரிவு உபச்சார விருந்தளித்தார்.
புதிய பிரதமராக நரேந்திர மோடி வரும் 21ம் தேதி பதவி ஏற்கவிருக்கிறார். இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியை சனிக்கிழமை ராஜினாமா செய்தார்.
மன்மோகன் சிங் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிரிவு உப்பசார விருந்து அளித்தார். இதில் பிரணாபுக்கு பிடித்த உணவான மீன் வகைகள், கலோட்சே கபாப், முர்க் நிஹாரி, சிக்கன் வகைகள் பரிமாறப்பட்டன.
சைவப் பிரியர்களுக்காக பொடோல் தொர்மா, அஞ்ஜீர் கே கோப்தே, கார்ஹி பகோரா, பன்னீர் பசந்தா உள்ளிட்டவை பரிமாறப்பட்டன. இந்த விருந்தில் எதிர்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜும் கலந்து கொண்டனர். விருந்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகளை அனைவரும் ரசித்து சாப்பிட்டனர்.
English summary
President Pranab Mukherjee hosted a dinner for outgoing Prime Minister Manmohan Singh and his Cabinet colleagues and treated them to mouth-watering Bengali delicacies like 'sorsey paturi' fish and Punjabi 'Kadi Pakora'.