பெங்களூரில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 53 வயது கோவில் பூசாரி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் 53 வயது கோவில் பூசாரி ஒருவர் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த 6 வயது சிறுமி 2 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து 7 வயது சிறுமி 27 வயது வாலிபரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இப்படி சிறுமிகள் சீரழிக்கப்படுவது பெங்களூரில் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் தெற்கு பெங்களூரில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக இருக்கும் 53 வயது நபர் தனக்கு தெரிந்தவரின் வீட்டுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் பெரியவர்கள் இன்றி குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர். உடனே அந்த பூசாரி வீட்டில் இருந்த 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த அவரின் 2 மைனர் சகோதரிகள் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் பூசாரி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பூசாரியை கைது செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+