Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உக்ரைன் அதிபர் செலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு- போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு!

Subscribe to Oneindia Tamil

ஹிரோஷிமா: ஜப்பானின் ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சி மாநாட்டின்போது உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலென்ஸ்கியை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார்

ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இம்மாநாட்டில் பங்கேற்ற பல நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலென்ஸ்கியை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார்.

Prime Minister Modi meeting with Ukraine President Volodymyr Zelenskyy

இச்சந்திப்பின் போது உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதல் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி, செலென்ஸ்கியிடம் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், தன்னைப் பொறுத்த வரை இது அரசியல் பிரச்சனையோ, பொருளாதார பிரச்சினையோ அல்ல எனவும், மாறாக மனிதநேயம், மனித விழுமியங்கள் பற்றிய பிரச்சினை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதில் உக்ரைனின் ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதமர் மோடி, அந்த மாணவர்களுக்கு இந்தியாவில் தேர்வு நடத்த உக்ரேனிய கல்வி நிறுவனங்கள் எடுத்த முடிவை வரவேற்றார். போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த நிலையை சீர் செய்ய இந்தியாவும், தானும் தனிப்பட்ட முறையில் அனைத்தையும் செய்யத் தயாராக உள்ளதாகப் பிரதமர் மோடி, செலென்ஸ்கியிடம் கூறினார்.

உக்ரைன் மக்களுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்று பிரதமர் கூறினார். உக்ரைனின் தற்போதைய நிலைமை குறித்து அதிபர் செலென்ஸ்கி பிரதமருக்கு விளக்கினார். இரு தரப்பினரும் தொடர்ந்து தகவல்களைப் பரிமாரிக்கொள்ள ஒப்புக்கொண்டனர்.

இம்மாநாட்டின் போது, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார். இம்மானுவேல் மேக்ரானுடனனா சந்திப்பில், 2023 ஜூலை 14-ம் தேதி நடைபெறவுள்ள பாஸ்டில் தினத்திற்கு அழைப்பு விடுத்ததற்காக பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, வியட்நாம் நாட்டின் பிரதமர் ஃபாம் மின் சின், கொரிய குடியரசு அதிபர் யூன் சுக் யோல். ஜப்பானியப் பிரமுகர்களான டாக்டர் டோமியோ மிசோகாமி, ஹிரோகோ தகயாமா உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

Prime Minister Modi meeting with Ukraine President Volodymyr Zelenskyy

மேலும் பிரதமர் மோடி ஜப்பானின் ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார். இத் திறப்பு விழாவின் போது, பிரதமரின் சிறப்பு ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நகாதானி ஜென், ஹிரோஷிமா நகர மேயர் கசுமி மட்சுயி, ஹிரோஷிமா நகர சட்டமன்றத்தின் சபாநாயகர் தட்சுனோரி மோட்டானி, ஹிரோஷிமாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசு அதிகாரிகள், இந்திய சமூக உறுப்பினர்கள், ஜப்பானில் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+