Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமரை கற்பனை என்றவர்கள்.. தற்போது ஜெய்ஸ்ரீராம் என்கிறார்கள்.. காங்கிரஸ் மீது பிரதமர் மோடி அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: இன்று ஹரியானா மாநிலம் சென்ற பிரதமர் மோடி அங்கு ரேவரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, கடவுள் ராமரை கற்பனை என்று கூறிவந்த காங்கிரஸ் தற்போது ஜெய்ஸ்ரீராம் சொல்கிறது என்று விமர்சித்துள்ளார்.

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். டெல்லி நோக்கி செல்வோம் என்ற பெயரில் விவசாயிகள் தொடங்கியுள்ள இந்த போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு பல்வேறு கெடுபிடிகளை செய்து வருகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லைகளில் விவசாயிகள் மேற்கொண்டு வர முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

Prime Minister Narendra Modi to visit Haryana today

விவசாயிகள் மீது ஹரியனாவின் ஷம்பு பகுதியில் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி தாக்கினர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், போராட்டத்தை அமைதியான முறையில் தொடருவோம் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

விவசாயிகள் போராட்டத்தால் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று ஹரியானா மாநிலம் சென்றார். ஹரியானாவில் உள்ள ரேவரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நாட்டில் அமைய உள்ள 22-வது எய்ம்ஸ் மருத்துவமனை இதுவாகும். 210 ஏக்கர் பரப்பளவில் 1,650 கோடி மதிப்பில் இந்த மருத்துவமனை கட்டப்பட உள்ளது.

இதுதவிர குருகிராம் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதேபோல் ரோஹ்டக் - மேஹ்கம் - ஹ்ன்சி ரயில் பாதை பணிகள் முடிந்த நிலையில் இதனை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த ரயில் பாதை திறக்கப்பட்டதன் மூலம் ரோஹ்டக் - ஹிசாக் இடையேயான பயணம் தூரம் கணிசமாக குறையும்.

ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்த பிறகு பிரதமர் மோடி அங்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஹரியானாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. தொடந்து பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், ராமரை கற்பனை என்று கூறிவந்த காங்கிரஸ் தற்போது ஜெய்ஸ்ரீராம் சொல்கிறது என்று விமர்சித்து பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+