ராமரை கற்பனை என்றவர்கள்.. தற்போது ஜெய்ஸ்ரீராம் என்கிறார்கள்.. காங்கிரஸ் மீது பிரதமர் மோடி அட்டாக்
சண்டிகர்: இன்று ஹரியானா மாநிலம் சென்ற பிரதமர் மோடி அங்கு ரேவரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, கடவுள் ராமரை கற்பனை என்று கூறிவந்த காங்கிரஸ் தற்போது ஜெய்ஸ்ரீராம் சொல்கிறது என்று விமர்சித்துள்ளார்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். டெல்லி நோக்கி செல்வோம் என்ற பெயரில் விவசாயிகள் தொடங்கியுள்ள இந்த போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு பல்வேறு கெடுபிடிகளை செய்து வருகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லைகளில் விவசாயிகள் மேற்கொண்டு வர முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் மீது ஹரியனாவின் ஷம்பு பகுதியில் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி தாக்கினர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், போராட்டத்தை அமைதியான முறையில் தொடருவோம் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
விவசாயிகள் போராட்டத்தால் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று ஹரியானா மாநிலம் சென்றார். ஹரியானாவில் உள்ள ரேவரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நாட்டில் அமைய உள்ள 22-வது எய்ம்ஸ் மருத்துவமனை இதுவாகும். 210 ஏக்கர் பரப்பளவில் 1,650 கோடி மதிப்பில் இந்த மருத்துவமனை கட்டப்பட உள்ளது.
இதுதவிர குருகிராம் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதேபோல் ரோஹ்டக் - மேஹ்கம் - ஹ்ன்சி ரயில் பாதை பணிகள் முடிந்த நிலையில் இதனை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த ரயில் பாதை திறக்கப்பட்டதன் மூலம் ரோஹ்டக் - ஹிசாக் இடையேயான பயணம் தூரம் கணிசமாக குறையும்.
ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்த பிறகு பிரதமர் மோடி அங்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஹரியானாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. தொடந்து பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், ராமரை கற்பனை என்று கூறிவந்த காங்கிரஸ் தற்போது ஜெய்ஸ்ரீராம் சொல்கிறது என்று விமர்சித்து பேசினார்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications